பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

வந்த துன்பத்தை நீக்கி, இனி துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல பெரியோரைப்போற்றி உறவாகக் கொள்ள வேண்டும்.

Help from the proficient to ward off and guard against ills, is to be cherished in friendship.

***

0 comments:

Post a Comment